Saturday, September 28, 2013

வேதனை






புல்லாங்குழல் வேண்டுமே வேண்டுமாம்
மகள் உதயமொழி
அழுகிறாள்

உன் மூன்று நாள் உதிரம்
வெயில்மீதேறி மிதக்கும் என் துடிப்பு,
வலிக்கிறது வலிக்கிறது வலிக்கிறது...

இது மழை இரவு
இது கோடை பகல்
இது பிழை
இது வன்மம்

“ நான் ஏன் நீயாகப் பிறக்கவில்லை “

நெஞ்சடைத்துச் சாகிறான்
இதயத்தை வரைந்து காட்டுபவன்

புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.

உதயமொழி சிரிக்கிறாள் பார்
என் உதிரமே!  

No comments: