Sunday, September 15, 2013

அலறல்





தீரவே தீராதப் பசியுடன்
பிம்பங்களைப் பெருக்கும் கண்ணாடியாய்
நம் வக்கற்ற ப்ரியத்தின்
வாள்முனையில் முட்டும் எண்ணிலா முகங்கள்
முகங்களே அல்ல.

எனக்கு நானே கதற கதற கழுத்தறுத்து
ரத்தம் பீறிடும் கனவிலிருந்து
விழும்
கண்களைத் தாங்கி
சுடர்விட்டு அலறும் நம் மனமைதானத்தின் பெருந்தாபம்
குளிர்.

No comments: