தீரவே தீராதப் பசியுடன்
பிம்பங்களைப் பெருக்கும் கண்ணாடியாய்
நம் வக்கற்ற ப்ரியத்தின்
வாள்முனையில் முட்டும் எண்ணிலா முகங்கள்
முகங்களே அல்ல.
எனக்கு நானே கதற கதற கழுத்தறுத்து
ரத்தம் பீறிடும் கனவிலிருந்து
விழும்
கண்களைத் தாங்கி
சுடர்விட்டு அலறும் நம் மனமைதானத்தின் பெருந்தாபம்
குளிர்.
No comments:
Post a Comment