Sunday, August 25, 2013

விருப்பத்தின் பாடல்



இந்த சிவனடிமை
உன்னையும் அழைத்துக்கொண்டு
வெகுதூரம் போகிறேன்
ஒரு தகவலுக்காக
என்னிடமே சொல்லிக்கொள்கிறேன்

திரும்புதலின் பாரம்
முழுக்கமூடிய அந்தக் கூட்டிற்குள்
எப்படிப் புகுந்தோம்

கைகள் அள்ளிய நீர்
மறுப்பேதுமின்றி வானம் பார்க்கிறது

உயிர்மேல் உயிர் பூட்டிக்கொண்டு
மிதக்கின்ற வலி
பெருந்துயர்க்காதல்

No comments: