Sunday, August 25, 2013

மாயமான்




கனவிலிருந்து விழுந்து
குருதி தெறிக்க கை உடைந்திருக்கிறதா?

பதிமூன்றாவது பெக்கில் மதுபோத்தலின் மூடியை
காதலியின் நெற்றிப்பொட்டென வெறித்ததுண்டா?

எறும்போடு பேசிய பேரனுபவம்
இருந்திருக்கிறதா?

தனிமை பற்றிய பயம்
வந்திருக்கிறதா?

மனப்பிறழ்வு எனும் மாயமானின்
பரிச்சயம் இருக்கிறதா?

மற்றும்
பேசிக்கொண்டிருப்பது நான்தானா என்ற
வலிமீறிய சந்தேகம் தேவையில்லை

No comments: