Sunday, August 25, 2013

எப்படி குடியை நிறுத்துவான் ஈஸ்வர்




அதுஒரு நல்ல அடர்மழை அந்தி..
நீல நிற “U” வடிவ குழாயில் டக்கீலாவும்
புறங்கையில் உப்புக்கலந்த எலுமிச்சையும்
ருசித்துக்கொண்டிருந்தேன்

" மிஸ்டர் ஈஸ்வர் மிஸ்டர் ஈஸ்வர் " என
உலுப்பிக் கொண்டேயிருந்தான்
நள்ளிரவிற்குப் பிறகும்
டக் இன் கோட் சூட் சகிதம் ஸ்டீபன்

ஒவ்வொரு முறையும்
ஒன்மோர்
ஒன்மோர்
சொல்லி
சார்த்திக்கொண்டிருந்தேன்
வெறுமையை

நன்றாக ஞாபகமிருக்கிறது என்பது
பொய்

ஜமால் எவ்வளவோ சொல்லி சொல்லிப் பார்த்தும்
“ நிஷான் பாத்பைன்டரில் ” பறக்கத்
துவங்கினேன்

மதுப்பழக்கமேயில்லாதவன்
என் பெர்ஸ்னல் செகரெட்ரி ஜமால்
அவன் மகள்
சிறுமி ரிபாயா
இன்று மாலையும் என்னை அங்கிள் என்றுதான் கையசைத்தாள்

மங்கலாக உடன்வந்துகொண்டிருக்கிறான்
ஜமால் 

No comments: