Sunday, August 25, 2013

உயிர்த்திருப்பின் இசை




ஒரு முதல்முத்தம் பிரசுரித்தக் கிளர்வென
அசைகிறது இலை
அந்தி கோபுரத்தின் ஒற்றைதீபம் ஒத்து
விரல் நீட்டியது அது
மெல்லத் திரும்பி
“என்ன?” என்பதுபோல்
பார்வை தருகிறது இலை
பாலருந்தும் மார்குழந்தையென
சயனிக்கத் துவங்கியது அது

அதற்குப்பிறகு
கொட்டித் தீர்ந்தது ஆலாபனை மழை


நன்றி உயிரோசை


No comments: