Sunday, July 14, 2013

***



சன்னிதானம் நிறைய நிறைய
ரோஜா மலர்களால் அலங்கரிக்கும்
உனது மெல்லிய குளிர்ந்தக் கரங்கள்
தொடும் முன்
தனிமையின் பிரசித்திப்பெற்ற சன்னிதானமாக
இருந்திருந்தது என் அகம் !

அப்பெருஞ்செயல் செய்துகாட்டிவிட்டு     
முத்தத்திற்கு மறுப்பு தெரிவித்து
முகத்தை அங்கும் இங்கும் திருப்பும்
குழந்தையைப்போல சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்
கொஞ்ச நேரமாய்

கிடைக்காத முத்தத்தின் ஈரத்தை

பருகிக்கொண்டிருக்கிறேன்..

No comments: