Sunday, July 14, 2013

ஆராதனா எனும் பேய் 50



எங்கு திரும்பினாலும்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்

பிரிவு என்பது வறுமை
பிரிவு என்பது பயம்
பிரிவு என்பது கண்ணீர்
பிரிவு என்பது வலி

ஆராதனா

ஜன்னல் தீண்டி விரல் அசைக்கும் மழையிடம்
நெஞ்சுக்கூடு விம்மச் சொல்லிக்கொள்கிறேன்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எனது தானென்பதை

ஆராதனா உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எங்கு திரும்பினாலும்

பிரிவு என்பது காதல்
பிரிவு என்பது காதல்   

No comments: