Thursday, June 20, 2013

பகடி



சொல்லி வைத்தார்போல்
ஓர் புன்னகை  

ஏற்கவுமில்லை
மறுதலிக்கவுமில்லை

எதிர்கொள்ளப்படுகிறது    

ஒரு அதிர்ச்சியை
ஒரு அவமானத்தை
ஒரு துரோகத்தை
ஒரு சந்தோசத்தை
ஒரு நிரந்தரமின்மையை

பிறகு

கமா
மற்றும்
பிறகு பிறகு பிறகு...   

எனும்போது
நக்கலும் வெடிச்சிரிப்பும் கூடவே

அவரவர்க்கு
ஆயிரம் பேராயிரம் கஸ்ட நஸ்டங்கள்

இது கவிதையா
இல்லை
கேள்வி பதிலா?

தத்துவ விசாரணைகள் உறங்கிக் கொண்டிருக்கும்
தருணம்
எதற்கு இன்னும் உயிரோடு இருக்கிறது
இரண்டு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி 


No comments: