Thursday, June 20, 2013

துயரத்திற்கு மாத்திரம் கதவுகள் இல்லை




மின்னல் போல் வெட்டி
மறையும்
அவள் கன்னத்தில்
இடப்பட்ட முத்தம்

உங்களது கழுத்தைப் பதம் பார்க்கிறது 

பின் ஏன் அருகமர்ந்து
வற்புறுத்துகிறீர்கள்? அழகான கோடையில்
மழை பாடச்சொல்லி

ஆமென்என்கிற சமாதானம்
தூக்கில் தொங்குகிறது.

புன்னகைக்கு விலையேது
புண்ணியமாய் போகட்டும்
உயிர் நிரந்தரிக்கும்

வெட்கச் சிரிப்பு
பாக்கி இருக்கிறது.   


No comments: