Saturday, May 18, 2013

ப்ரதானம்




குறிப்பு உணர்த்துதலென்பது
அந்தரங்கப் பரிசுகள் பற்றி விவாதிக்க அல்ல

அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு

தங்கள் உலகைத் தங்களுக்காக 
வரைகிறது 
கெட்டுப்போனத் தலைகள் இரண்டு எனும்படியான

ஆயிரம் முரண்கள் இருந்துவிட்டுப்போகட்டும்

மழை வேண்டி 
இமைகளைத் துன்புறுத்தி
வருத்துகிறான் 
கண்களைத் திறந்து 
உயிரானவன் 

நிதனாமாக மொழி பெயர்க்கிறாள்
தன் வலிஉடலை
பேரானந்தமாக ஆராதனா...

அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை 
ப்ரதானம் 

No comments: