Thursday, May 23, 2013

அரேபிய ராசாக்கள் 29




சிறகு முளைக்கும் காற்று கண்டதுண்டோ 
சிறுபிள்ளாய்

நீ எனும் பேருலகில் 
சின்னதாய்த் தவழ்ந்துக் கொண்டிருக்கிறது..  

வேறேதும் அறியாதப் பெரும்புயல் 
அல்லது 
நெடுவறண்ட கானல்

கண்கள் முட்டி அழும் 
உன் வெரித்தப் பார்வையிடம் சொல்

விரும்பி வந்துக் கொண்டிருக்கிறேன்
திரும்பி 

போதுமா அம்மா
கொஞ்சம் சப்தமாகத்தான் சிரியேன்.

No comments: