Saturday, April 27, 2013

ஆராதனா எனும் பேய் 42




இந்த மழையும்
இந்த நாளும்
தொடர்ந்திருத்தல்
நானில்லாதபோதும் சாத்தியப்படத்தான்
இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரியவில்லை

குமிழ்கள் காற்றில் அறைபடுவதென
உதிர்ந்துக்கொண்டிருக்கும்
லப்டப் லப்டப் இதயஒலியின் இறுதி
கண்ணில் நீர் வழிந்த
உனது போன நிமிடமே
உடைந்து போய்விட்டது
ஆராதனா

ஒரு வறட்டுப் புன்னகையோடு
எழுந்து போகலாம்
வந்தவர்கள்

தாழக்கிடக்கும் உனது சேலையை
இடுப்பில் தூக்கி
முடிந்துவிட்டு
தண்ணீர் விட்டுக் கழுவு
பூக்கள் சிதறிக் கிடக்கும்
வரவேற்பறையை.

No comments: