Saturday, March 9, 2013

அலைதலின் முற்றுகை





கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த
மனம் எனது

தவறவிட்ட
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை
மழையும் வெயிலும்
துரத்திக் கொண்டிருக்கிறது

மேல்நோக்கி
கீழிறங்கி
அந்தரத்தில் மிதந்து அலையும்
இறகு ஒன்றினைத் தனதாக்க
நெஞ்சு விம்ம விம்ம
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன்

ஓணான் அடிக்கும் குழந்தைகளை
யதேச்சையாய்க் கடக்கிறேன்

தொப்பலென
எனக்கான உனதான தாய்மடியில்
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்

***

நன்றி நவீன விருட்சம் 

No comments: