Friday, March 22, 2013

தொடர்ந்த முத்தம் ஒரு வதை




கேவல்கள் கூடிச் சிதறும் கண்கள்
கொத்தி உமிழும் கணம்
பிரிந்து செல்தல் வாதை

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

இந்தக் குளிர் காற்று
ஏன் இவ்வளவு வெயிலில் மிதக்கிறது

சுண்டல்காரப் பையன்
கல கலவெனச் சிரிப்புருளும் தர்ப்பூசணி யுவதி
என்ன வித்தியாசம்?

தெரிக்குது
நாயி..
நாய்யி..
ஓரமா போயித்தொலைடா

( 7.15 PM )
ஷங்கர் கொஞ்சம் நேரத்த வரேன்னார்

இப்பலாம் வர வர ஜாஸ்தி சிக்கடிக்க ஆரம்பிச்சுடுச்சு
ஆபாயில்னா அதுக்கு உயிர்

ம்,
ஒரேயொரு முத்தம்..

ம்
.......
.......

தொடர்ந்த முத்தம் ஒரு வதை

***

No comments: