Saturday, March 9, 2013

ஒரு பெருங்கணம்



எடுத்துக்கொள் என நீட்டுகிறாய்
மௌனத்திலிருந்து விடுபட்ட
சிறு புன்னகையை

ரோஜாவின் முட்களிலிருந்து
ஒரு துளி இரத்தம் செய்து
பைத்தியக்காரப் புன்னகையாக்கினேன்
அப்புன்னகையை

பழைய மௌனத்தின் குதிகாலிலிருந்து நடுங்கி
புதிய மௌனத்தின் குறுநெஞ்சின் மேல்
சாய்ந்து விழுகிறது
ஒரு பெருங்கணம்..!

நன்றி எதுவரை.நெட்


No comments: