Saturday, February 16, 2013

விடிந்துவிட்டது




நீயும் நானும் தற்கொலைக்குத் தயாரான
அதிசாமக் கனவிலிருந்து
சுளீரென அழைத்து வருகிறது
காதினுள் இடறி விழுந்த எறும்பொன்று

நீரூற்றி தலையசைக்கையில் மெதுவாய்
நாவு சுழற்றுகிறது
வளர்ந்து வளரும் இரவு

சிறுநீர் முடித்துத் திரும்பிப் புரள்கையில்
நதி நீந்தும் இலைதனில்
நல்ல விலாசமாக அமர்ந்திருக்கிறது
அவ்எறும்பு

நன்றி உயிரோசை




No comments: