Saturday, February 16, 2013

ஆராதனா எனும் பேய் 36



அப்-பேரழகிய துபாய் யின்
ஒரு வெயிற்கால நள்ளிரவில்
அதன் இயல்பு மாறாது ஓடிக்கொண்டிருந்தது மெட்ரோ ட்ரெயின்..

அதனுள்
நூற்றாண்டுகள் சென்றாகி விட்டது
நாம் பறந்து கொண்டிருக்கிறோம்
சிறகுகள் விரிய விரிய

மேலும்

இறகுகள் படர்த்தும் மொழி சுடர்
அன்பினது யாசிப்பிற்கு
நானும்
நீயாகிய ஆராதனாவும்
இறுதியிலும் இறுதியான
பலி

அல்லது

நேற்றைய குளிர் அந்தி
கர்நாடகா சிமோகாவில் ஆரத்தழுவிய
நமது உதடுகள்
சிரித்த  
அத்-துயர இசை!  

No comments: