Tuesday, January 29, 2013

அப்பொழுது நாடு நிலமாக இருக்கவில்லை




ஆறாம் வகுப்பு "பி" பிரிவு சலீமா
விடாய் உதிரத்தை மூன்று மாதங்களுக்கு
முன்பே நிறுத்தி விட்டிருந்தாள்
குழந்தை சலீமா அம்மா சலீமா

படுகொலைகளுக்குப் பிறகான
ஆயிஷாவின் நாட்டில் சுகப்பிரசவம்

அம்மா சலீமா அம்மா ஆயிஷா
விரல்கள்அழுந்த பற்றி உலர்கிறாள்
பர்தா முகத்துள் விழிகள் அகல

மழை பூக்கும் கானலில்,
திரும்பி வருதலுக்கான சாத்தியங்களற்ற
நாற்பத்திமூன்று வயது பட்டாளத்தான்
போர் முடிவுற்றுத் திரும்பிக்
கொண்டிருக்கிறான்

அடர் மணற்காற்றில் உதிரும்
ஈச்சம் பழங்கள்
பொருக்கும் சலீமாவின் நீள்வர்ணக்
கனவுகளோடு

சிதைவுடைய இடமுலையில்
தாய்ப்பால் அருந்திக்கொண்டிருக்கிறாள்
விடுதலை அறிவிக்கப்பட்ட நாட்டில்
சலீமாவின் மகள்


***

நன்றி வலசை (பயணம் -3)

நன்றி நேசமித்ரன் & கார்த்திகைப்பாண்டியன்

No comments: