Thursday, January 10, 2013

அவ்வளவே



சடலம் ஒன்றைத்தேடி
வலியுணர
எத்தனிக்கும்
உனக்கு முன் தான்
மிக நெருக்கமாக நின்றுக்கொண்டிருக்கிறேன்

நிற்காத மழைக்குப் பின்னாடி
ஞாபகத்தை வன்புணர்கிறாய்
நீ

நல்லது
நாளை நமது நாளே

எந்த ஓரத்திலாவது ஒதுங்கிக்கிடக்கலாம்
நானற்ற எனது வெற்று உடல்


No comments: