Friday, January 25, 2013

அதிர்வு



பெயரிடாப் பறவைகள் இரண்டின்
வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
மழை நனைந்த நமது காலம்

சலசலத்து ஓடும் இம்மணல்நதியில்
கொஞ்சம் உயிர் அள்ளிப்பருக
வந்தேன் என்கிறாய்

என்னிடமிருந்த எல்லா ஆயுதங்களையும்
தூக்கி வீசிவிட்டு
அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டேன் உன்னை

நன்றி கல்கி இதழ் (06/01/2013)



No comments: