Thursday, January 10, 2013

கதறல்





ஏலியனொன்று உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறது
அகாலம் என்றும் பாராது

மழை பிசாசு நீயென்பது
அதுஅறிந்திருக்க வாய்ப்பில்லைதான்,
உன் பின்னங்கால்வரை பூத்திருக்கும்
கூந்தல் விரித்து ஆடு

அன்பின் ஆலாபனைக் கண்டு பைத்தியம் பிடித்து
மரித்துப் போகட்டும் அது

*

நன்றி கல்கி இதழ் (06/01/2013)




No comments: