Tuesday, January 29, 2013

ஆராதனா எனும் பேய் 32




உனது தலைமயிரைப் போன்றதென
வேறொன்றுமில்லை
என்னைப் பரவசமடையச் செய்ய
என்றொரு முறை
மன்னிக்க
பல நூறு முறை உன்னிடம் சொல்லியதாய்ச் சொல்கிறாய்..
தெரியுமா ஆராதனா உனக்கு
நீ என்னைக் கட்டி வைத்திருக்கும் இப்பெருங்காட்டில்
மழைக்காலமென்று தனியாக ஏதுமில்லை

வெயிலின் மரணத்தைப் பற்றி
நீ யாரிடம் சொல்லத் துவங்கினாலும்
வியர்க்கவே செய்யும்
கூர்ந்து யோசி ஆராதனா

சரி சரி
விடு
அதோ உன் குழந்தைக்கு
இந்தப் பைத்தியக்காரனை அறிமுகப்படுத்தி வை!


No comments: