Thursday, December 6, 2012

திரும்புதலின் பாரம்







எனது மனதில் எறியப்பட்ட உந்தன் கல்
கண்ணாடிச்சில்லுகளைப் பொழிந்துள்ளது,
ஸ்தம்பிக்காமல் கேசம் சரி செய்துகொள்
நீ

கொல்லும் நினைவுகள் மீது
ஒரு கூடை வண்ணத்துப்பூச்சிகளின் நிறம்
நீ நிறைந்த என் தனிமை துயரம்
சிலாகித்தல் பழகுதல் அழகு

சூழும் மேகத்தின் உள்
பறக்கும் விமானம் அண்ணாந்து தேடும்
பால்யனாய் திரும்புகிறேன்
நான்

சில்லுகளில் வழியும் குருதி
தோய்த்த விரல்களுடன் வருகிறாய்
நமது பெருங்காதல் நோக்கி

காத்திருப்புகளின்றிப் பிரிவுக்குஏது உயிர்

மௌனத்தின்மேல் மெல்லிய ஒப்பனையுடன்
ஈர்க்கும்
உனது அன்பு பெய்யும் மழையில்
திரும்புகிறேன்
பெருவலியின் தடயங்கள் கழுவி

நன்றி எதுவரை.நெட்


No comments: