Wednesday, December 19, 2012

வீடு




அவள்
குளியலறையில் தூக்கு மாட்டிக்கொண்ட வீட்டினுள்
ஒரு மிகிழ்வான இசை சலிக்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது
நான் கடக்கும் சமயங்களிலெல்லாம்

அனாரின் குழந்தைகள் இடம்பெயர்ந்து விட்டன

கைகளைப்பற்றி அழுந்த முத்தமிட்டபடி
அந்த இரவில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்
தோழி
முன் எப்பொழுதும் போலல்லாததாக இருந்தது அது
மனம் அத்தனை லேசாக இருப்பதாக
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்

விடியற்காலையில் நான் திரும்பியிருந்தேன்
எனது வீட்டில் பர்வீனா காத்துக்கொண்டிருப்பாள்

அன்று நான் அனாரை சந்திக்காமல்
இருந்திருக்கலாம்

நன்றி பண்புடன் குழுமம்


No comments: