Friday, December 7, 2012

ஆராதனா எனும் பேய் 16




16.
பெருமழைக்காலத்து வண்ணத்துப்பூச்சியாய் 
என்னுள் படபடத்துக் கொண்டிருக்கிறாய் 
ஆராதனா..

நீ நிரம்பிய தனிமையோடு நான் உலவும் 
இம்மணல் வெளியெங்கும் 
வரைந்து வைத்திருக்கிறேன்
நிழல் தாகமாய் உன்னை 
ஆராதனா..

கடல்களுக்குமேலே நூல் பிடித்தாற்போல் 
பறக்கும் நமது வானம்
சொட்டிக் கொண்டிருக்கும்
இப்பெரும்பசியில் நர்த்தனம் செய்வதில்தான் 
எத்தனை ஆத்மார்த்தமாக உள்ளது
ஆராதனா..

***  

17.
ஆராதனா, 
அன்றொரு நாள் முத்தமிட்ட 
உன் தெளிர்ந்த முதுகினை 
ஞாபகத்தில் குறு குறுக்கிறது 
கையகப்பட்ட இச்சிறுஇலை

எனது தொலைதேச நதியில் பெய்து கொண்டிருக்கும் 
உனது மழையில் 
வாதையின் ஸ்பரிசம் தளும்ப 
மீண்டும் தொப்பூல்கொடி அறுந்து விழுகிறேன் 
அழுகையும் சிரிப்புமாய்ஆராதனா

***

18.
நீண்ட நீண்ட இரவும் பகலுமாய் 
பிரிவு தின்று பிறழ்வில் அலையும் 
என் நமதுமனசை 
மேகம் அவிழும் முதல் மழையாய் விடுவிப்பாயா
ஆராதனா

***



No comments: