Tuesday, October 9, 2012

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள்



என்றோ ஒரு நாள் 
வீசியெறிந்த உணவிற்கு
காலைச் சுற்றும் நாயென
ஞாபகத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன் 

நினைவில் காடுள்ள 
அங்காடித்தெரு பெரும்பசி யானையாய்
பிரிவை மாத்திரமே 
அகோரமாய் வரைகிறாய் நீ

மிக உக்கிர வெயில்
நம் இருவரையும் புணர்ந்து கொண்டிருக்கிறது 

நாளையொரு பெருமழையில் 
அழிந்தும் போகலாம் இத்தாவரம்
அல்லது 
ஆழப் புதைந்துக் கிடக்கும் 
வேரிலிருந்து மெல்ல 
தலையெடுக்கலாம் ஒரு சிறு துளிர்

காலத்தின் கரங்களில் மொத்தமுள்ள ரேகைகள் 
யாரால்தான் படித்துவிடமுடியும்






1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

யாராலும் முடியாது... நடப்பது நடந்தே தீரும்...