Tuesday, September 4, 2012

சொல்லிவிடமுடியாத கோடை






ஒரு சொல்லிவிடமுடியாத கோடையை
பார்வையில் செருகி விரைபவளிடம்
என்ன சொல்லியிருக்கக் கூடும் 
மழை நின்ற இம்-மரத்தின் கிளை?

வெயில் குடித்த குடியை
ரோட்டோரத்தில்
சிறுநீராக நனைத்துக்கொண்டிருந்தவனிடம்
நான் எதுவும் சொல்லவுமில்லை
கேட்கவுமில்லை

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான (கோப) வரிகள்...