Tuesday, September 4, 2012

தொலையும் வனம் ஒழுகும் கடல்



பால்காம்புகளில்
ரிதம் மீளும் உதடுகளை
அபரிமிதமாய் அமிழ்த்தி அமிழ்த்திக்
கொல்கிறாய்

நீ யாரென முன் நின்று 
பரிசுத்தமாய் அழத் துவங்குகிறாய்
கலைந்த மயிர்கள் அள்ளி

பிரியத்தின் நகம் கீறி புன்னகைக்கிறாய்,

வியாபிக்கும் அன்பு
கருணையற்று வலிக்கிறது

நன்றி உயிரோசை


No comments: