Friday, September 28, 2012

சிறகுகள் இன்னும் பறவையிடத்தே







உடைக்கப்பட்ட
நினைவுப் பறவையின் இறகுகள்
பறந்து கொண்டிருப்பது அபத்த அந்தரத்தில்

வழியும் துயர மழை
நிரம்ப
நாம் நம்பும் பேருலகம்

சிறகுகள்
இன்னும் பறவையிடத்தே
ஞாபகம் அல்ல இருப்பு..!   

பெருஞ் செவியில்
திரும்புதலுக்கான இசையாய் நீந்திக் கொண்டிருக்கின்றன
வெயிலற்ற அந்தரங்க நிறங்கள்

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

///ஞாபகம் அல்ல இருப்பு..! ///