Friday, September 28, 2012

சர்ப்பங்களிலான உலகம்






நெருங்கி வருகிற விழிகளிலிருந்து
சர்ப்பங்கள் வெளியிறங்குவது
அறிந்தே
நகர்தல் மறுதலிக்கிறோம்

விஷம் பூத்த
செந்நிற மௌனம் நிரம்ப
துயர் இசைப் பாடல்

ரட்சித்தலையும் புனிதத்தையும் தவிர்த்து
துரோகத்தையும்
குரூரத்தையும் 
குறிப்புகள் சேகரித்து சேகரித்து 
மரப்பெட்டியில் அடைக்கலாம் அவர்கள்

யாவருக்குமான ஆமென்களோடு
கரைந்து தீரட்டும்
தைரியம்கூடிய பரிசுத்தம் நிறைந்த
ஸ்வாதீனத்தில் அல்லாத
நமது வக்கற்ற நேசமும்
நாமும்  

நன்றி யாவரும்.காம்




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னதொரு உண்மை வரிகள்...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_29.html) சென்று பார்க்கவும்...

நன்றி…