Thursday, August 30, 2012

அசுத்த சமாதானம்






பிள்ளை மொழி பேசுபவளின்
உதடுகளில்
ஒரு பொழுதும் அல்லாத
பனி நடுக்கமாய் 
பிரிவின் உடைந்த உடைந்த சொற்கள்

இறுதியாக
பிறிதொரு பொழுதில் சந்திக்கலாம் என்கிறாள், 
அசுத்த சமாதானம்
ஞாபகப் பிழையாய்
உயிர் உண்ணும் என்கிறேன்

கேவல்கள் 
ஸ்பரிசத்தின் இசையாய்
நேசத்துள் உருள்கிறது!

***

நன்றி கல்கி மற்றும் வெயில்நதி சிற்றிதழ் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் வரிகள்...