Wednesday, August 1, 2012

ஆக..



முழுமையாகக் கைவிடப்பட்டவன்
என்று உணரும் கணம்
நீங்கள் தூக்கிச் செல்லும் படியான கனத்தில்
இருக்கப் போவதில்லை

ஒரு சாதாரணக் கவிதையின்
எல்லா அம்சங்களையும் உடைத்து
ஒரு கவிதை வேண்டும் என்கிறார்கள்

நான்
புறக்கணிப்புகளையும்
நிராகரிப்புகளையும்
அவமானங்களையும்
பற்றியே சதா புலம்பிக் கொண்டிருக்கிறேன்

நன்றி வல்லினம்.காம்



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

புலம்பல் வேண்டாமே நண்பரே...