Tuesday, August 21, 2012

17-M ரூட்டில் வழக்கத்தைவிட ஜாஸ்தியான டிராபிக் ஜாம்








பெருவிபத்து பற்றிய செய்தியையும்
இன்னும் பருவம் எட்டியிராத அம்மா இல்லாத எனது மகள் 
புணரப்பட்டு உயிரில்லாது கிணற்றுள் கிடைத்த செய்தியையும்
விளம்பர இடைவேளைக்குமுன் சொல்லி முடித்திருந்தாள்
நிறைந்த வேலைப்பாடுகளுடைய நெக்லஸ் அணிந்த வாசிப்பாளினி

குழந்தைகளுக்கு டியுசன் எடுத்து
மிஞ்சிப்போன வாழ்கைக்கு யாசகம் செய்வாள் தன்னை
வேளாங்கண்ணியின் இளம் மனைவி 
அப்பாயில்லாத சங்கரின் அம்மாவோ பித்துப்பிடித்தவள் ஆகியேவிட்டாள்
பயணத்தில் இருந்த அறிமுகமில்லாத இன்னும் சிலதுகள்
கை கால்கள் விடுபட்டு அரசாங்க ஆஸ்பத்திரியில்
வலி கொள்ளாது கத்திக் கொண்டிருக்கின்றன

பாவம் அந்த துறு துறு நான்கு பள்ளிச் சிறுவர்கள்
சொர்க்கத்தில் கடவுளர்களோடு எண்ணெய் வறுபடுகின்றனர்

கவிழ்ந்த பஸ்ஸின் தப்பிய இயக்குனர்கள்
வழக்குகளோடு பிதுங்கிச் சாவார்கள்?

அதே விபத்தில் இறந்துபோன நான்
சொர்க்கத்தில் சாத்தானோடு ஒயின் அருந்திக் கொண்டே
நாளை உங்களோடு பேசுகிறேன்

அதுவரை நீங்கள் "உச்" கொட்டுங்கள்
செத்தவர்களுக்கெனவும் 
பிழைத்தவர்களுக்கு ஆகவும்
நிகழ்ந்த விபத்தின் காரணத்திற்கான
அனுமானங்களைக் கொறித்துக் கொண்டு

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் சம்பவங்கள்...