Sunday, July 29, 2012

அள்ளிப் பருகவென







சிற்றெறும்புகள் சில 
சர்க்கரையில் புணர்ந்து கொண்டிருந்தன,  
பின்னிரவில்
நமது படுக்கையறைக்குள் நுழைந்திருந்த
குண்டு ஒல்லி ஜோடி எறும்பை
உனக்கு அறிமுகப்படுத்தினேன்

தேநீருக்குப் பதில்
இளம் மழைக் காலையொன்றில்
அள்ளிப் பருகு என
நீ வெட்கத்தைத் தருகிறாய்

நன்றி உயிரோசை


No comments: