Thursday, July 12, 2012

இடறி விழுந்த கருணை



பஞ்சின் கனம் கொண்ட ஒரு கருணை
இப்பொழுது
என்னைச் சல்லடையிட்டுத்
தேடிக்கொண்டிருக்கும்

மதுவருந்திய தருணம்
மிளிர்ந்த
ஞானம் வெட்டுண்டு கிடக்கிறது
உக்கிர வெயில் வானத்திலென
அறியாது

ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதென
அதுஎப்பொழுது விழுந்தடித்தோடியதோ
எனது கிழிந்த பாக்கெட்டிலிருந்து?

நான் நடக்கும் சாலையில் தினமும் கவனிக்கும்
அழுக்குப் பிள்ளையோடு சிக்னலில் நிற்பவளுக்கென
நிரம்ப யோசனை செய்து

ஒரு வாட்டர்பாக்கெட்டைக் கேன்சல் செய்து மீதித்திருந்த
அஞ்சு-ரூபா காயினை ரொம்ப நேரமாச்சு,
தேடிக்கொண்டிருக்கிறேன்

நன்றி உயிரோசை

No comments: