ஓர் எளிய காற்று விலக்கிய
பைத்தியக்காரனின் மயிரடர்ந்த குறி கண்டு
பயம் பிடித்த சிறுமியின் பால்யத்தை
செடியிலிருந்து ரோஜாவைப்
பிரிப்பதெனப் பிரிக்கிறாள்
பின்,
உதிரத்தின் ரகசியம் குறித்து
அவ்வளவு இயல்பாய்
பதின்மத்தினுள் வயது உதிர்ந்ததை
மகிழ்மொழிக்குப் புன்கண்ணீரோடு
புரிய வைக்கிறாள் என் தாய்!
நன்றி உயிரோசை
No comments:
Post a Comment