Friday, June 22, 2012

மகிழ்மொழி பூப்பெய்தினாள்



ஓர் எளிய காற்று விலக்கிய
பைத்தியக்காரனின் மயிரடர்ந்த குறி கண்டு
பயம் பிடித்த சிறுமியின் பால்யத்தை

செடியிலிருந்து ரோஜாவைப்
பிரிப்பதெனப் பிரிக்கிறாள்

பின்,
உதிரத்தின் ரகசியம் குறித்து
அவ்வளவு இயல்பாய்
பதின்மத்தினுள் வயது உதிர்ந்ததை
மகிழ்மொழிக்குப் புன்கண்ணீரோடு
புரிய வைக்கிறாள் என் தாய்!


நன்றி உயிரோசை

No comments: