Wednesday, June 6, 2012

அன்படர்ந்த தேற்றுதலில்



மரணத்தை விழுங்கிக் கொண்டு
கேவலுடன் மடி வழிய வழிய
உப்பு நீர் நிறைத்து
காதல் இறைஞ்சுகிறது
நிரம்ப பரிச்சயமுள்ள இரவிடத்து 
கண்களைக் குருடாகச் செய்ய

விந்து முந்திய கலவிக்குப்
பிறகான இரவில்
காதல் மனைவியின்
அன்படர்ந்த தேற்றுதலில்
மெல்ல ஒளியுறுகிறது
அமைதியானதொரு பகல் 

நன்றி உயிரோசை  

No comments: