Saturday, May 26, 2012

உன்னளவு அன்பை..







உன்னை அன்பில் கொலை செய்தலென்பது
மிகவும் பிடித்திருப்பதா 
அத்தனை நிதானமாய்
அத்தனை யதார்த்தமாய்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்

நானோ
மீளாவரிகளைத் தேடித் தேடி
திசை தப்பிய பறவையாய் அலைகிறேன்
நீ தரும் அன்பின்
ஆத்மார்த்த வலிக்குப் பரிசளிக்க

நன்றி உயிரோசை


No comments: