Tuesday, May 15, 2012

ஆம்



நீ தேவதையாகக் கொல்கிறாய்
நான் சாத்தானாகிச் சாகிறேன்

மேலும்
நீ அன்பை வலிக்க வலிக்கத் தருகிறாய்
நான் வலியை அன்பெனத் திணிக்கிறேன்

மேலும்
நீ சுவாசத்தை என்னுள் நீட்டிக்கிறாய்
நான் மூச்சுமுட்டலை அத்தனை இலகுவாக ஏற்றுக்கொள்ள
வைக்கிறேன்

மேலும்
நீ ஒரு சொல்லை உடைத்து நூறு கவிதை சமர்ப்பிக்கிறாய்
நான் நூறு கவிதை தின்று ஒரு சொல் தேடுகிறேன்

மேலும்
நீ இருக்கிறாய்..
நான் இருப்பதுபோல் இருக்கிறேன்.. !

மேலும் 
நீ தேவதையாகவே கொல்கிறாய்
நான் சாத்தானாகவே சாகிறேன்

நன்றி உயிரோசை

No comments: