Tuesday, April 10, 2012

மரணித்த அதே மைக்ரோசெகண்டில் உயிர்த்தல்!





இரவின் ஜன்னலில் நின்று
பகலின் நிழலென என்னை
அவ்வளவு தத்ரூபமாக கையாள்கிறாய்

ஒரு நதி
ஒரு குளிர்
ஒரு ஆசுவாசம்

ஒரு எறும்பு
ஒரு சிறு இலையினில்
தன்னை வாழ முயலும்
ஒரு மழைப்பொழுதின்
ஈரம் கலையாத கணமது

ஒரு நானும்
இன்னொரு நானும்
துயிர்த்த பெருவெளியது

ஒரு சொல்லை
இன்னொரு சொல்
வெற்றிகொள்ளும் பெருவேட்கையது

பகலின் நிழலில் தீர்க்கமுறப்
படர்ந்திருப்பதென்னவோ நீ தான்
என்பதறிவாயோ?!

நன்றி உயிரோசை

No comments: