Tuesday, April 10, 2012

என்றென்றைக்குமான அனார்




குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழையுள்
துயில் மறந்திருக்கும்
அச்சிறுபிள்ளையின் புறம்
ததும்பி உடைந்து நிற்கும்
பர்தா தாயின் வெள்ளை மழை
வறண்டு நனைக்கிறது
பெரும் பாலைவெளியின்
அத்தனை அத்தனை விழிகளையும்

நன்றி உயிரோசை

No comments: