Wednesday, April 25, 2012

உன்னை வரைபவன்






பாசிகள் பற்றாத நீர்ப்பாறையென
இருத்தலின் அசௌகரியங்கள்

என்னைவிட நீ நன்றாக
அறிந்து வைத்திருப்பதிலுள்ள
ஆச்சர்யம்தான்

இத்தனை அவமானங்களுக்குப் பிறகும்
இத்தனை நிராகரிப்புகளுக்குப் பிறகும்
இத்தனை கொலைகணங்களுக்குப் பிறகும்
இத்தனை அசைவற்ற மௌனத்திற்குப் பிறகும்..

நான் உன்னை வரைந்து கொண்டிருப்பதின்
சூட்சுமம்! 

நன்றி உயிரோசை

No comments: