Thursday, April 5, 2012

ஆராதனா எனும் பேய்



என்றென்றைக்குமாய் நிறைந்திருக்கும் சைகையாய்
என்னுள் ஒளிர்ந்திருக்கிறாய் நீ

கண்ட மழையின்
கண் அடங்கா வானம் நீ

சாத்தான் கனவின் பூந்தோட்டம்
நீ எனும் உயிர் வலி

நதி கொள்ளா சிற்றிலை
நீயென
தடம் புரளலாமெனில்

இருப்பு பாதையெங்கும் வாழ்க்கைக் கூட்டம் !

No comments: