Thursday, April 5, 2012

மறுதலித்தல்






இனிக்க இனிக்கத் தேன் தடவிய
கூரிய கத்தி கொண்டு
எனது இருப்பை அறுக்க முயல்கிறாய்
அப்பொழுதும் சொல்வேன்
கத்தியை லாவகமாகப் பிடியென்று!

உனது இரைச்சலை
உனக்கேத் திருப்பித் தருவேன்
அடிஉயிரை வேரறுக்கும் இசையாக!

விடாது முயல்வாய்
தீர்மானத்தின் கால்களை
மலையுயர மௌனத்திலிருந்து
எதேச்சையாகத் தள்ளிவிட,
அப்பொழுதும் திரும்பி நின்று
பரிசாகத் தருவேன்
ஒரு அழகான ரோஜா மலரை! 

நன்றி உயிரோசை 


No comments: