Sunday, March 4, 2012

ஒரு குற்ற உணர்விலிலிருந்து விடுபடுதல்







யாருமற்ற கடற்கரையில்
எனக்கு நானேப் பேசிக்கொண்டு

வாழ்வு திரும்பும்
என் வீட்டு வீதியில்
அநாதரவாய் நின்று கொண்டிருக்கும்
தெரு நாயின் காதில்
வலியப் போய் தடவிக் கடக்கையில்

ஆடை மறைத்த மன நிர்வாணம்
என்னை உன்னுள் கூட்டிச்செல்கிறது
இன்னும் நெருக்கமாக.

No comments: