Sunday, March 4, 2012

இனி









அகாலத்தின் நிசப்த தெருவில்
உடலுதிர்ந்த இறகென தனித்தலைகிறேன்  

பிரிவின் துயர்
நிலா விழுங்கும் பௌர்ணமி கடலென
அதி பிரகாசமாய்.

என்னுள் உடைந்து-அழுகும்  
ஞாபகக் கீறல்களை
மாம்ச விருப்புடன் 
அலகு முட்டிச் செல்ல
தாழப் பறந்து கொண்டிருக்கிறது 
பிணந்தின்னிக் கழுகொன்று.

ரயில் பாலம் அருகே
இனி நீ வரத் தேவையில்லை
பயந்து பயந்தவாறே!  




No comments: