Wednesday, March 7, 2012

சாத்தான் கடவுளாதல்!



தனிமையோடு விவாதித்துக் கொண்டிருக்கும்
இந்நேரத்தில் உள்வரும் நீ
என்னையொரு மனநலம் குன்றியவனென
எண்ணிவிட சாத்தியமுள்ளது

தவறில்லை,
நானும் இவனிடத்தில்
அப்படித்தான் சொல்லிவைத்திருக்கிறேன்
உன்னை  

அந்தப் பீடிக்கட்டில் சிலவற்றை
தந்துவிட்டு நீ கிளம்பலாம் ( உன் வசந்தி தேடுவாள் )

ஒரேயொரு நிபந்தனை
போகிற வழியில்
மாலனுக்குப் பைத்தியமென
தங்கப்பனிடம் மட்டும் சொல்லிவிட்டுப் போ

அவன் பார்த்துக் கொள்வான் மற்றனைத்தும்
( தங்கப்பன் செல்வியின் கள்ளப் புருஷன் ) 
செல்வி??
வேண்டாம், நானென் தனிமைக்குத் திரும்புகிறேன்

ஒரு சாத்தானின் உருவம் வரைந்து
உலவ விடுகிறேன் அதனை,

இப்பைத்தியக்கார வெளியில்
கைவிடப்பட்டவர்கள் உள்ள வரை
தன்னை யாரும் விழுங்கிவிட முடியாதென
கூக்குரலிடுகிறதது..
அதன் கண்களில் ஒரு குரூரம் வழிகிறது..
ஒரு பெருங்கோபம் கொப்பளிக்கிறது..

ஒரு எதிர்நோக்கா நொடியிலது
பக்கத்துக்கு குடிசையை வட்டமடிக்கிறது

காமத்தின் வெம்மையில் அவள் பற்றி எறிகிறாள்!!

கரமைதுனத்தின் கடைசி முனகலில்
சாத்தான் கடவுளாகிறான் 
அதனறியாது.

நாளை வயக்கரையில் நடக்கையில்
ஒரு அவசியமற்றப் புன்னகையோடு
எல்லோரும் என்னைக் கவனிக்க
அதிக வாய்ப்பு உள்ளது. 



நன்றி உயிரோசை.. 



No comments: