Tuesday, March 6, 2012

நீங்கள் உங்களை நகர்த்துங்கள் வேகமாக




சொற்கள் மிதக்கும் அறையில்
மௌனமாக நிரம்பி இருந்தாள் அவள்

பசிப்பொழுதினில் பசலைக் கால
பிசுபிசுப்புகளை உண்டு வியாபித்தாள்

தனித்த இரவின் வெம்மைச் சுவரில்
அவள் எதை எதையோ வரையத் துடிக்கிறாள் 

பேரன்பின் உதட்டு முத்தம்
கண்ணாடிச் சில்லுகளாய் சிதறிக் கிடக்கும்
அப்படுக்கை அறையினுள்,

யாருடைய இசையையோ நிரம்பப் பருகி
பேதலில் உரக்கக் கத்துகிறாள்

இதென் காதல்..
இதென் காதல்..

நீங்கள் நகர்த்துங்கள் உங்களை வேகமாக! 



நன்றி உயிரோசை..



No comments: