Sunday, March 4, 2012

காதலாதல்








மழைநீர்க் கோடுகளெனப் பதிந்திருக்கும்
உனது விரல் ரேகைகள்,


அழகழகான வண்ணங்கள் நிறைந்த
வரைபட வீட்டின் தனிமை போல்

அல்லது


தரப்படாத யாசகக் காசின் கணம் ஒத்த
ஏழ்மைக் குழந்தையின் தத்தளிக்கும் இதயம் போல்


என அறிந்த நிமிடத்தில்
யாதொரு யோசனையுமற்று
உனது கரங்களைப் பற்றிச் செல்கிறேன்
நம் காதல் இதுவரை கண்டிராத
ஓர் மர்மக் குகையின் அற்றத்திற்கு.

நன்றி உயிரோசை


No comments: